அமெரிக்காவில் வாஜ்பாய்: புஷ்- புடினை சந்திக்கிறார்
நியூயார்க்:
பிரதமர் வாஜ்பாய் அமெரிக்கா போய்ச் சேர்ந்தார்.
24ம் தேதி ஐ.நா. பொதுக் குழுவின் கூட்டத்தில் உரையாற்றுகிறார். சர்வதேச பயங்கரவாதம், அதில் பாகிஸ்தானின்பங்கு குறித்து வாஜ்பாய் பேசுவார்.
ஐ.நாவில் வாஜ்பாயைச் சந்திக்க விரும்புவதாக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் தரப்பில்இருந்து இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால், முஷாரபை சந்திக்க விரும்பவில்லைஎன வாஜ்பாய் கூறிவிட்டார்.
புஷ் தவிர, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சில நாட்டுத் தலைவர்களையும் வாஜ்பாய் சந்தித்துப்பேசவுள்ளார்.
இதற்கிடையே இந்தியாவில் ஏற்பட்டு வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து துணைப் பிரதமர் அத்ாவனி மற்றும்பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடுவுடன் அவ்வப்போது தொலைபேசி மூலம் வாஜ்பாய் ஆலோசித்துவருகிறார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கலானாதால் ராஜினாமா செய்தமத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியுடனும் வாஜ்பாய் பேசினார்.
நாட்டுக்குத் திரும்பிய பின் கட்சித் தலைவர்களுடன் முழு ஆலோசனை நடத்திய பிறகே ஜோஷியின்ராஜினாமாவை ஏற்பதா இல்லையா என வாஜ்பாய் முடிவு செய்வார் என பிரதமரின் செய்தித் தொடர்பாளர்நியூயார்க்கில் நிருபர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications