ஊழல்- சொத்துக் குவிப்பு: முன்னாள் தென்னக ரயில்வே அதிகாரிகள் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
வருமானத்தை மீறி சொத்து சேர்த்த தென்னக ரயில்வேயின் முன்னாள் பொது மேலாளர் கீர்த்திவாசன், முன்னாள்ரயில்வே வாரிய உறுப்பினர் அக்னிஹோத்ரி ஆகியோர் உள்பட 7 பேர் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளது.
1995-96ம் ஆண்டு காலத்தில் இவர்கள் தென்னக ரயில்வேயின் உயர் பதவிகளில் இருந்தபோது ஊழல்,முறைகேடுகளில் ஈடுபட்டும், ரயில்வே பணிகளை காண்ட்ராக்ட் விடுவதில் கமிஷன் அடித்தும் கோடிக்கணக்கில்சொத்து குவித்தனர். இது தொடர்பாக இவர்கள் மீதும், காண்ட்ராக்டர் ஒருவர் மீதும் கடந்த 2000ம் ஆண்டில் சிபிஐவழக்குப் பதிவு செய்தது.
இவர்களது வீடுகளில் ரெய்டும் நடத்தப்பட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் இப்போது சிபிஐ இவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. சென்னை சிபிஐநீதிமன்றத்தில் இது தாக்கல் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு- திருச்சி இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக காண்ட்ராக்டருக்கு முன் பணம்தரப்பட்டதில் இவர்கள் பெரும் மோசடி செய்தனர். இதனால் ரயில்வேக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் விவரம்: கீர்த்திவாசன், அக்னிஹோத்ரி, முன்னாள் தலைமை திட்டமேலாளரும் (ரயில்வே கட்டுமானப் பிரிவு) இப்போதைய தலைமை தண்டவாளப் பொறியாளருமான ராஜாமணி,முன்னாள் நிதித்துறை ஆலோசகரும், தலைமை ரயில்வே அக்கெளண்டன்ட் நாராயணன், முன்னாள் கூடுதல்ரயில்வே பொது மேலாளர் சேதுராமன், மண்டல சிக்னல்ஸ் மற்றும் தொலைத் தொடர்பு பொறியாளர்ராமசுப்பிரமணியன், காண்ட்ராக்டர் பழனி ஆகியோர்,












Click it and Unblock the Notifications