30-க்குள் "எச்": இல்லாவிட்டால் "கட்" !
சென்னை:
மாத வருமானம் ரூ. 5000க்கு மேல் உள்ளவர்கள் இந்த மாத இறுதிக்குள் தங்களது ரேஷன் கார்டுகளை கெளரவரேஷன் கார்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது ரேஷன் கார்டுகள் தாங்களாகவேரத்தாகி விடும் என்று அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
"எச்" (கெளரவ கார்டு) முத்திரைப் பதித்துக் கொள்வதற்கு இந்த மாதம் 30ம் தேதிதான் கடைசி நாளாகும். அதற்குமேல் கால நீட்டிப்பு தர அரசு தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த கால கட்டத்திற்குள் எச்முத்திரை பெறதாவர்களின் ரேஷன் கார்டுகள், ரத்தாகி விடும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, போலீஸாருக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த ரேஷன் அரிசி தற்போது நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களது மாத வருமானம் ரூ. 5000க்கு இருப்பதால் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் மற்ற பொருட்கள் வழக்கம் போல அவர்களுக்குவழங்கப்படுகின்றன.