அவதூறு வழக்கு: ஆற்காடு வீராசாமி கோரிக்கை தள்ளுபடி
சென்னை:
தன் மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கில், நீதிமன்ற விசாரணையின்போது நேரில் வராமல் இருக்க விலக்குஅளிக்குமாறு கோரிய முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக அறிக்கை விட்டதாக ஆற்காடு வீராசாமி மீது சென்னை எழும்பூர்நீதிமன்றத்தில், அரசின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது கோர்ட்டில் நேரில் ஆஜராகி, கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆற்காடு வீராசாமி மனு செய்தார். அதில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல்,வழக்கறிஞர் மூலம் பதில் அளிக்க தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ், வீராசாமியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.