அத்வானி தப்பியதற்கு சிபிஐயே காரணம்: வீரமணி
சென்னை:
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் துணைப் பிரதமர் அத்வானியை மட்டும் விடுவித்துள்ளதற்குசிபிஐயின் போக்கே காரணம் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், அயோத்தி வழக்கில், அத்வானி மட்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாமல்விடுவிக்கப்பட்டுள்ளார். இது நியாயமற்றது, ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அத்வானி அயோத்தியில் இருந்தார் என்பதற்கு சாட்சிகள்இருந்தும், அது குறித்து சிபிஐ சரியான முறையில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யாத காரணத்தால்தான்அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
இதே கருத்தையே காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூறியுள்ளன. சிபிஐயின் செயல்பாட்டில் மத்தியஅரசு தலையிட்டு அத்வானியைக் காப்பாற்றிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications