பா.ஜ.க.- அதிமுக திருட்டு உறவு: திமுக குற்றச்சாட்டு
விழுப்புரம்:
பா.ஜ.கவுக்கும் அதிமுகவுக்கும் இடையே ரகசிய உறவு நிலவுவதாக திமுக மாநாட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாநாட்டின் நிறைவு நாளான இன்று திமுக முன்னாள் எம்.பியும் முக்கிய தலைவருமான ஆலடி அருணாபேசியதாவது:
ஜெயலலிதா மீது ஏகப்பட்ட ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கொஞ்சம்கூட கவலைப்படாத மத்திய அரசு உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி மீது மட்டும் வழக்குகளை மிகத்துரிதமாக நடத்தி வருகிறது. சிபிஐயை விட்டு அவரை அவசர, அவசரமாக விசாரித்துள்ளனர்.
இதற்குக் காரணம் அதிமுகவுக்கும் பா.ஜகவுக்கும் இடையே நிலவும் திருட்டு உறவு தான். இதனால் தான்ஜெயலலிதாவை பா.ஜ.க. ஆதரித்து வருகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுகவுக்கு இதே அதிமுகவால் இடைஞ்சல்களும் சிக்கல்களும்வந்தபோது திமுகவுக்கு துணை நிற்காமல் ஒதுங்கிக் கொண்டது பா.ஜ.க.
இரு ஆண்டுகளுக்கு முன் கருணாநிதியை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ய உத்தரவிட்டார் ஜெயலலிதா.இதுவரை அந்த விஷயத்தில் ஜெயலலிதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மத்திய அமைச்சர்களான முரசொலி மாறனும், டி.ஆர். பாலுவும் அதே நள்ளிரவில் போலீசாரால்அடாவடித்தனமாகக் கைது செய்யப்பட்டபோதும், பா.ஜ.க. ஆழ்ந்த மெளனம் தான் காட்டியது. மத்தியஅமைச்சர்களை விடுவிக்கக் கூட உத்தரவிடவில்லை.
ஜெயலலிதாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்குவதன் மூலம் பா.ஜ.கவின் இரட்டை வேடம் வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஜெயலலிதா மீதான வழக்குகளை விசாரிக்கவும் மறுக்கிறது. இதற்கெல்லாம் பா.ஜ.க.-அதிமுக இடையே நிலவி வரும் திருட்டு உறவே காரணம் என்றார் ஆலடி அருணா.
மாநாட்டு நிறைவு நாளான இன்று இரவு கருணாநிதி உரையாற்றுகிறார்.
இந் நிலையில் பா.ஜ.கவின் மாநில பொதுக் குழுக் கூட்டம் நாளை திருப்பூரில் தொடங்குகிறது. அதில் திமுகவின்குற்றச்சாட்டுகளுக்கு பதில் தரப்படும் என்று தெரிகிறது.
இதையடுத்து இரு கட்சிகளுக்கு இடையே மிக விரைவிலேயே நேரடி மோதல் வெடிக்கலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.