ஹெலிகாப்டரில் போகாமல் மக்களை பார்க்க முடியாதா?: ஜெவுக்கு மார்க். கம்யூ கேள்வி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

ஹெலிகாப்டரில் போய்த்தான் ஜெயலலிதா மக்களைச் சந்திப்பாரா, ஹெலிகாப்டர் இல்லாமல் மக்களைப் பார்க்கஅவர் போக மாட்டாரா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

அக் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக ஜெயலலிதா தான் கூறிக் கொண்டிருக்கிறார். அந்தபொருளாதார நிெருக்கடி யாருக்கு என்பதை அவர் தெளிவாக சொல்ல வேண்டும்.

பொருளாதார நெருக்கடி என்று ஒருபக்கம் கூறிக் கொண்டு, எங்கு போனாலும் ஜெயலலிதா ஹெலிகாப்டரிலேயேபறந்து கொண்டிருப்பது ஏன்?

ஹெலிகாப்டரில் போய் தான் இவர் மக்களை பார்ப்பாரா? ஹெலிகாப்டர் இல்லாவிட்டால் மக்களை சந்திக்கவேமாட்டாரா? ஹெலிகாப்டர் பயணத்திற்கு ஆகும் செலவு பொருளாதார நெருக்கடியின் கீழ் வராதா?

தமிழகத்தில் 3 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல, விசாரணைக்கு உட்பட்டிருக்கும் 6,072 அரசு ஊழியர்கள், ஆசியர்களையும் உடனடியாகபணியில் சேர்க்க வேண்டும்.

அரசின் புதிய தொழிற்கொள்கை, தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இல்லை, இருப்பதையும்பறிக்கும் வகையில்தான் உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+