For Daily Alerts
Just In
மாணவி மாயம்: 3 மாணவர்கள் மீது தாக்குதல்
மதுரை:
மதுரையில் மாணவி ஒருவர் காணாமல் போனது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 3 பேரை, மாணவியின்உறவினர்கள் கடுமையாக தாக்கினர். இதில் அவர்கள் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் நஸீமா பேகம். இவர் திடீரென்று காணாமல் போய் விட்டார். இதுகுறித்து அதேபகுதியைச் சேர்ந்த கோபிநாத், மதன் உள்ளிட்ட 3 மாணவர்களிடம், நஸீமா பேகத்தின் உறவினர்கள்விசாரித்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கிடையே மோதல் வெடித்தது. இதில் சம்பந்தப்பட்ட 3 மாணவர்களையும், நஸீமாவின்உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து நஸீமாவின் உறவினர்கள் 3 பேரைக் கைது செய்தனர். அந்தப்பகுதியில் பிரச்சனை பெரிதாகி விடாமல் தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டனர்.
Story first published: Sunday, September 21, 2003, 5:30 [IST]