நேபாளத்தில் இருந்து தப்பி சென்னையில் சிக்கிக் கொண்ட அரசியல் புள்ளி
சென்னை:
போலி பாஸ்போர்ட் மூலம் நேபாள நாட்டிலிருந்து தப்பி வந்த அந் நாட்டு அரசியல் கட்சி பிரமுகரை, அந்நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று மத்திய அரசுக்கு,சென்னையைச் சேர்ந்த மனித உரிமைக் குழுகோரிக்கை விடுத்துள்ளது.
நேபாள நாட்டைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் கஜுரல். இவர் அந் நாட்டு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அரசியல் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்து வந்தார். அந்நாட்டு அரசின் பல்வேறு வழக்குகள், பழிவாங்கும்நடவடிக்கைகளிலிருந்து தப்புவதற்காக லண்டனுக்கு தப்ப முடிவு செய்தார்.
இதையடுத்து போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வழியாக லண்டன் செல்லும் விமானத்தில் ஏறினார். ஆனால்,சென்னை விமான நிலையத்தில் அவர் பிடிபட்டுவிட்டார். தற்போது அவர் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
இவரது நிலையை அறிந்து பரிதாபப்பட்ட சென்னையைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு கஜுரலை நாடுகடத்த வேண்டாம் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் ரேவுண்ணி செய்தியாளர்களிடம் கூறுகையில், சில மாதங்களுக்கு முன் டெல்லிக்குத்தப்பி வந்த நேபாள நாட்டு செய்தியாளர் கிருஷ்ண சிங், அங்கு திருப்பி அனுப்பப்பட்டார். ஆனால், அவரைநேபாள போலீஸார் சுட்டுக் கொன்று விட்டனர்.
தற்போது கஜுரலை திருப்பி அனுப்பினாலும் இதே நிலைதான் அவருக்கும் ஏற்படும். எனவே கஜுரலை திருப்பிஅனுப்பக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications