பொடாவை உடனே வாபஸ் பெற வேண்டும்: கருணாநிதி
விழுப்புரம்:
அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை திமுக அனுமதிக்காது என கருணாநிதிகூறினார்.
திமுக மாநாட்டில் நிறைவுரையாற்றிய அவர் கூறியதாவது:
பொடா சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசின் முறை தவறியசெயல்களை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது உறுதியானால்,சட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து யோசிப்பேன் என பிரதமர் வாஜ்பாய் என்னிடம் உறுதிமொழி தந்தார்.
நக்கீரன் கோபாலை பொடா சட்டத்தில் கைது செய்தது தவறு என தமிழக அரசை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.அவருக்கு ஜாமீனும் தந்துள்ளது. பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு இதைவிட என்னஉறுதியான ஆதாரம் வேண்டும்.
பொடா விவகாரத்தில் வாஜ்பாய் எங்களை கைவிட்டுவிட்டதாகவே நினைக்கிறோம்.
தமிழ் 2,000 ஆண்டு பழமை வாய்ந்தது. நாட்டின் செம்மொழிகளில் ஒன்றாக இருக்க தமிழுக்கு முழுத் தகுதியும்உண்டு. உலகின் தொன்மையான இந்த மொழியை மத்திய அரசு உடனே செம்மொழியாக அறிவித்து உரியஅங்கீகாரம் தர வேண்டும்.
அயோத்தி விவகாரத்தில் திமுக தனது நிலையில் தெளிவாகவே உள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டக்கூடாது. இது தொடர்பாக பா.ஜ.க. சட்டம் கொண்டு வர முயன்றால் அதை திமுக திட்டவட்டமாக எதிர்க்கும்.நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும் என்பது தான் எங்கள் நிலை.
மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட முனைந்தால் மதக் கலவரம் தான் வெடிக்கும். ராமருக்குநாங்கள் எதிரிகளும் அல்ல. அவருக்கு சர்ச்சைக்குள்ளான இடத்தில் தான் கோவில் கட்ட வேண்டுமா?
தேர்தல் நிதி 30 கோடி வசூல்:
இதுவரை தேர்தல் நிதியாக மாநிலம் முழுவதும் ரூ.30 கோடி 50 ஆயிரம் வசூலாகியுள்ளது. இதில் சேலம்மாவட்டம்தான் நிர்ணயிக்கப்பட்ட 1 கோடியைத் தாண்டி ரூ.2 கோடியே 25 லட்சம் வசூல் செய்து கொடுத்துசாதனை படைத்துள்ளது என்றார் கருணாநிதி.