For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரதட்சணை கொடுமை: அதிமுக எம்.எல்.ஏவின் கணவர் கைது

By Staff
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை:

அதிமுக எம்.எல்.ஏ கருப்பாயியின் கணவர் கருப்பையா, வரதட்சணைக் கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கருப்பாயி. இவரது கணவர் பெயர் கருப்பையா.

கருப்பையாவுக்கு 1983ம் ஆண்டே திருமணமாகி விட்டது. அவரது முதல் மனைவி பெயர் கலையரசி. இதன்பின்னர் தான் கருப்பாயி உடன் வசிக்க ஆரம்பித்தார் கருப்பைய்யா. இந் நிலையில் கருப்பாயி அதிமுகவில் சீட்பெற்று எம்.எல்.ஏவும் ஆகிவிட்டார்.

கணவர் தொடர்பாக கருப்பாயிக்கும் கலையரசிக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடப்பதும் வழக்கம்.

இந்த நிலையில் கருப்பையா தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், எம்.எல்.ஏ. விடுதிக்குவந்து ரகளை செய்ததாகவும், தனது காரை எடுத்துச் சென்று மோதி விட்டதாகவும் சென்னை ஆயிரம் விளக்குஅனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் எம்.எல்.ஏ. கருப்பாயி.

இதைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு காவல் நிலைய போலீஸார், புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகணம்பகுதிக்குச் சென்று கருப்பையாவைக் கைது செய்து சென்னை கொண்டு சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X