சென்னையில் பயங்கர தீ விபத்து: 3 பேர் பரிதாப சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை, வியாசர்பாடி பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 2 பேர் உடல் கருகி இறந்தனர். இந்த தீவிபத்தைப்பார்த்த அதிர்ச்சியில் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.

வியாசர்பாடியில் உள்ள சஞ்சய் நகரில் அதிகாலையில் இந்தப் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. காற்று வேகமாகவீசியதால் குடிசை வீடுகளுக்கு தீ வேகமாக பரவியது.

தீ பரவத் தொடங்கியதும், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியேறினர். தீயணைப்புப் படையினருக்குத்தகவல் போனது. கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, செங்குன்றம் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்துதீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன.

தீ மளமளவென்று பரவியதில், ஏராளமான குடிசை வீடுகள் கருகின. இதில் சாமுவேல் (51), அவரது மகன் டக்ளஸ்(வயது 21) ஆகிய இருவரும் தூங்கிய நிலையில் கருகி இறந்தனர். சாமுவேலின் மனைவி வசந்தா வீட்டை விட்டுவெளியேறியதால் தப்பினார். இருப்பினும் அவர் கீழே விழுந்ததில் கால் முறிந்தது. மேலும் 2 பேருக்கும் தீக்காயம்ஏற்பட்டது.

இந்த நிலையில் தீவிபத்தைப் பார்த்ததும் முருகன் என்பவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் அவர்மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிர் விட்டார். இந்த தீவிபத்தில்150க்கும் மேற்பட்ட குடிசைகள், கோழிக்கடையில் இருந்த 30 கோழிகள், ஏராளமான சைக்கிள்கள், சில மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. சிறிய சர்ச்ஒன்றும் தீக்கிரையானது.

சம்பவம் நடந்த இடத்தை வட சென்னை மாவட்ட போலீஸ் இணை ஆணையர் சைலேந்திரபாபு சென்றுபார்வையிட்டார். அமைச்சர் ஜெயக்குமார், துணை மேயர் கராத்தே தியாகராஜன், மாநகராட்சி ஆணையர்விஜயக்குமார் ஆகியோரும் அப் பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளைவழங்கினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+