கோபால் ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பொடா வழக்கில் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன்வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல் முறையீடு செய்தது.

கோபாலை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றஉத்தரவுப்படி கோபாலை இன்னும் தமிழக அரசு விடுதலை செய்யவில்லை. இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தில்கோபால் விடுதலையை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன் தலைமை நீதிபதி காரேதலைமையிலான பெஞ்ச்சிடம் இந்த மேல் முறையீட்டு மனுவை வழங்கினார்.

மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி காரே, இந்த மனுவை நீதிபதி வயவா தலைமையிலான பெஞ்ச் இன்றேவிசாரிக்கும் என்று அறிவித்தார்.

தமிழக அரசு மேல் முறையீடு செய்யப் போவதை நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். இந்த மேல் முறையீட்டுமனுவை தாக்கல் செய்வதற்காக தமிழக சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலியும் அதிமுக வழக்கறிஞர் ஜோதியும்டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+