குஜராத்தை கலக்கிய மிக்-21 போர் விமானம்
அகமதாபாத்:
குஜராத்தில் ல் இன்று காலை போர் விமானம் மிகக் குறைவான உயரத்தில் படு வேகத்தில் பறந்தது. இதையடுத்துஅந்த விமானம் சென்ற பாதையில் ஆங்காங்கே பலத்த சத்தத்துடன் வெடிப்புகள் ஏற்பட்டன.
ஏற்கனவே மதக் கலவரப் பீதியில் ஆழ்ந்துள்ள குஜராத்தில், வெடிகுண்டுகள் தான் வெடித்துவிட்டதாக புரளிகிளம்பியது. இதனால் பெரும் பதற்றமும் ஏற்பட்டது.
இதையடுத்து இந்திய விமானப் படை உடனடியாக விளக்கம் வெளியிட்டுள்ளது. அதில், மிக்-21 ரக போர்விமானம் நகர்ப் பகுதியில் தாழ்வாகப் பறந்து சோதனையில் ஈடுபட்டதாகவும், தாழ்வான உயரத்தில் மிகஅதிகமான வேகத்தில் பறக்கும் போது இவ்வாறு வெடிகுண்டு வெடிப்பது போல சத்தம் ஏற்படுவது வழக்கம் தான்எனவும் கூறியுள்ளது.
மிகக் குறைவான உயரத்தில் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் விமானம் பறக்கும்போது சூண்ணிணடிஞி ஞணிணிட்என்ற நிலை ஏற்படும் எனவும், இதனால் குண்டுகள் வெடிப்பது போன்ற பயங்கர ஒலி கிளம்பும் எனவும்விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் டி.கே. சிங் தெரிவித்தார்.
தென் மேற்கு விமானப் படைத் தளத்தில் இருந்து கிளம்பிய இந்த மிக்-21 ரக விமானம் மிகக் குறைவான அதிபயங்கர வேகத்தைத் தொட்டபோது காற்று மண்டலத்தில் ஏற்பட்ட உயர் அழுத்த வேறுபாடு தான் வெடிகுண்டுகள்வெடித்தது போன்ற அதிர்வுக்குக் காரணம் என்றார். இந்த சத்தத்தை விமானம் பறக்கும் இடத்தில் இருந்து 100 கிமீதூரம் வரை கேட்க முடியும் என்றார்.
முன்னதாக இந்த விமானம் பறந்து சென்ற அகமதாபாத் மீதி பறந்தபோது, காந்திநகர், வதோதரா ஆகியநகரங்களில் பயங்கர சத்தம் எழுந்ததோடு, வீடுகளும் அதிர்ந்தன.
எதனால் இந்தச் சத்தம் ஏற்பட்டது, அதிர்வு ஏற்பட்டது என்று தெரியாமல் போலீசார், தீயணைப்புப் படையினர்,வானிலை ஆய்வு மையத்தினர் குழம்பினர். நில நடுக்கம் ஏற்பட்டுவிட்டதாக அதிர்ச்சி பரவியது. பின்னர் இதுகுண்டுவெடிப்புகளாக இருக்கலாம் என்று கருதப்பட்டு பதற்றம் அதிகரித்தது.
இதன் பின்னர் தான் விமானப் படை விளக்க அறிக்கை தந்தது.