கண்ணப்பன் மீது பாய்கிறது பொடா: வாஜ்பாய்க்கு ஜெயலலிதா அதிரடி கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Kannappanமத்திய அமைச்சர் கண்ணப்பன் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருவதால், அவர் மீதுபொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர்ஜெயலலிதா நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார்.

மதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கண்ணப்பன் சமீபத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், விடுதலைப்புலிகளை ஆதரிப்பதை கைவிட மாட்டேன். இதனால் பொடா சட்டம் பாய்ந்தாலும் கவலையில்லை என்றுகூறியிருந்தார்.

இதையடுத்து அவரை பொடாவில் கைது செய்யவும், அதற்குத் தேவையான ஆதரங்களைத் திரட்டவும்போலீசாருக்கு ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும் அவரைக் கைது செய்ய வசதியாக மத்திய அமைச்சர் பதவியில்இருந்து நீக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறைக்கு தமிழக உள்துறையில் இருந்து சார்பில் கடிதம்அனுப்பப்பட்டது.

இந் நிலையில் பிரதமர் வாஜ்பாய்கே முதல்வர் ஜெயலலிதா நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மத்திய அமைச்சர் எம்.கண்ணப்பன் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருகிறார். மத்தியஅமைச்சர் ஒருவரே இப்படிப் பேசி வருவது கடுமையான கண்டனத்துக்குரியது. எனவே, கண்ணப்பனைஉடனடியாக மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

கடந்த 16ம் தேதி நடந்த கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பகிரங்கமாக பேசியுள்ளார் கண்ணப்பன்.மேலும், புலிகளுக்கு ஆதரவாக 26 முறை பேசியுள்ளதாகவும் அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக கண்ணப்பன் தொடர்ந்து பேசி வருவதுநல்லதல்ல. அவரது செயல் பொடா சட்டத்தின் 18வது, 21வது பிரிவுகளின் கீழ் பெரும் தேச விரோதக் குற்றமாகும்.அவரை மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து மத்திய அரசு நீக்காவிட்டாலும் அவர் மீது பொடா சட்டத்தின்படிநடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டத்தை மதிக்கும் மாநில அரசாகும். இதனால் இந்த அமைச்சரைக் கைது செய்வதேசரி என தமிழகம் நினைக்கிறது. மத்திய அமைச்சர் பதவியில் இருப்பதால் தன்னை யாரும் ஏதும் செய்துவிடமுடியாது என நினைத்துக் கொண்டு தான் கண்ணப்பன் இவ்வாறு புலிகளை ஆதரித்து பகிரங்கமாகப் பேசிவருகிறார்.

உங்கள் தலைமையில் உள்ள அரசில் பதவி வகிக்கும் அமைச்சர் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப்பேசி, அரசியல் சட்டத்தையே கேலிக் கூத்தாக்கி வருவதை நீங்கள் தடுத்தாக வேண்டும். புலிகளை ஆதரித்தன்மூலம் அமைச்சராக இருக்கும் தகுதியையே அவர் இழந்துவிட்டார்.

இதனால் அவரை உடனே பதவியை விட்டு நீக்கி, நாட்டின் சட்டத்தை நிலை நிறுத்த உதவுமாறு பிரதமர்வாஜ்பாயைக் கேட்டுக் கொள்கிறேன். அரசியல் காரணங்களுக்காக கண்ணப்பனை பிரதமர் பதவி நீக்கம் செய்யமறுத்தால், அதை தமிழக அரசு பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்காது. உரிய நடவடிக்கை எடுத்துகண்ணப்பனைக் கைது செய்யும்.

சட்டவிரோத செயலில் ஈடுபடும் மத்திய அமைச்சரை மாநில அரசு கைது செய்வதை எந்த சட்டம் தடுக்காது என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+