For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின்னல் தாக்கி 2 பெண்கள் உள்பட 5 பேர் பலி: உடல்கள் கருகின

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாயினர்.

பாரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி பூச்சி என்பவரும் அவரது குடும்பத்தினரும் நேற்று தங்களது வயலில் வேலைபார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மேகங்கள் கூடின. இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது.

இதையடுத்து வயல் வேலையை முடித்துக் கொண்டு குளக் கரை வழியாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது அவர்கள் மீது மின்னல் தாக்கியது.

உயர் அழுத்த மின்சாரம் போல தாக்கிய மின்னலில் பூச்சி, அவரது மனைவி இந்திரா, சகோதரர் அர்ஜூனன்,விவசாயக் கூலித் தொழிலாளிகளான மாரி மணவாளன், சித்திரை ஆகியோர் அந்த இடத்திலேயே உடல் கருகிபலியாயினர்.

மேலும் ஒரு பெண்ணின் உடல் வெந்து போனது. இவர் மகுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் மின்னல் தாக்கில் 5 பேர் பலியானது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X