அரசு தொழிற்சாலையில் பயங்கர தீ: ரூ. 1 கோடி நாசம்- ஊழியர்கள் மீது சந்தேகம்
தஞ்சாவூர்:
தமிழக அரசுக்குச் சொந்தமான நைலான் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ. 1கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின. இந்த நிறுவன ஊழியர்களே தீ வைத்தாக புகார்கூறப்படுகிறது.
தஞ்சாவூர் அருகே பனையக்கோட்டை என்ற இடத்தில், தமிழக அரசுக்குச் சொந்தமான நைலான் கயிறுதயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஊதிய உயர்வு தொடர்பாக நிர்வாகத்துடன், ஊழியர்கள்அவ்வப்போது மோதலில் ஈடுபடுவது வழக்கம்.
இந் நிலையில் தொழிற்சாலையில் திடீரென்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 3 கிட்டங்கிகளில் இருப்புவைக்கப்பட்டிருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள நைலான் கயிறுகள் எரிந்து கருகின. கட்டடத்திற்கும் பெரும் சேதம்ஏற்பட்டது.
தஞ்சை பகுதியில் இந்த தீவிபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிறுவன ஊழியர்களே தீவைத்திருக்கலாம்என்று பனையக்கோட்டை பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
இது குறித்து நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications