புதிய நிர்வாக நகரம்: 6 மாடல்கள் தயார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மகாபலிபுரம் அருகே ரூ. 1ஷ200 கோடியில் அமையவுள்ள துணை நிர்வாக நகரத்தின் 6 மாதிரிகள்தயாராகியுள்ளன.
சென்னை மாமல்லபுரம் அருகே தையூர் மற்றும் திருவிடந்தை ஆகிய இரண்டு கிராமங்களையும் சேர்த்து 900 ஏக்கர்பரப்பளவில் புதிய துணை நிர்வாக நகரம் அமையவுள்ளது.
இதற்கான மாதிரி வடிவங்கள் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இங்கு மொத்தம் 10 தளங்களைக் கொண்ட நான்கு கட்டடங்கள் கட்டப்படவுள்ளதாகவும் தெரிகிறது. இந்தமாதிரிகளை முதல்வர் ஜெயலலிதா பார்வையிட்டு அதில் ஒன்றை இறுதி செய்வார்.
இதற்கிடையே தலைமைச் செயலகம் எங்கு அமையும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகவளாகத்திலேயே தலைமைச் செயலகம் அமையுமா அல்லது அதுவும் மாமல்லபுரம் பகுதிக்குக் கொண்டுசெல்லப்படுமா என்பது குறித்து அரசிடம் இருந்து சரியான விளக்கம் இல்லை.












Click it and Unblock the Notifications