அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி இளங்கோவன் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசியல் உள்நோக்கத்தோடு தன் மீது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிகாங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இளங்கோவன் அளித்த பேட்டியில், தமிழகத்தில் வெள்ள நிவாரண உதவிகள்சரியான முறையில் மக்களை சென்றடையவில்லை என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இதையடுத்துஇளங்கோவன் மீது சென்னை தலைமை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் இளங்கோவன் மனு செய்துள்ளார். அந்த மனுவில், என்மீது அரசியல் உள்நோக்கத்தோடு இந்த அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே இதை ரத்து செய்துஉயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் முதல்வர் ஜெயலலிதா, பொதுத்துறை செயலாளர், அரசு வழக்கறிஞர்ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இளங்கோவன் மீது இது தவிரவும் மேலும் பல வழக்குகளை அரசு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+