இளைஞர்களை டீஸ் செய்த அரவாணிகள் கைது: பெண்கள் சிறையில் அடைப்பு
சேலம்:
சேலத்தில் சாலையில் நடந்து சென்ற இளைஞர்களை விபச்சாரத்திற்கு அழைத்தும், கேலி செய்தும், கையைப்பிடித்து இழுத்தும் டீஸ் செய்த 12 அரவாணிகளை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் கொண்டலம்பட்டி, அருகே உள்ள பள்ளிக்காடு பகுதியில் ஏராளமான அரவாணிகள் வசித்து வருகிறார்கள்.இவர்களில் பெரும்பாலானவர்கள், விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந் நிலையில் இரவு நேரத்தில் இப்பகுதி வழியாக சென்ற சில இளைஞர்களை வழிமறித்த அரவாணிகள்,அவர்களை விபச்சாரத்திற்குக் கூப்பிட்டுள்ளனர். அவர்கள் வர மறுத்துள்ளனர்.
அரவாணிகள் விடவில்லை, சட்டையைப் பிடித்தும், தலையை கோதி விட்டும், இளைஞர்களை துரத்தியுள்ளனர்.
பயந்து போன இளைஞர்கள் ஓட்டம் பிடித்தனர். அரவாணிகளும் அவர்களை துரத்திச் சென்று சட்டையைப் பிடித்துஅடித்துள்ளனர். பின்னர் தங்களது கையில் வைத்திருந்த கத்திகளால் தாக்கவும் முயன்றுள்ளனர்.
இதையடுத்து இளைஞர்கள் கடுமையாகப் போராடி தப்பி வந்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து இளைஞர்களை கேலி செய்து தாக்கிய 12 அரவாணிகளைக் கைது செய்தனர்.அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸார், கோர்ட் உத்தரவுப்படி அனைவரையும் சிறையில் அடைத்தனர்.
முன்னதாக அவர்களை ஆண்கள் சிறையில் அடைப்பதா, பெண்கள் சிறையில் அடைப்பதா என்ற குழப்பம்உருவானது. இதையடுத்து அவர்களை பெண்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications