For Daily Alerts
Just In
கோபாலின் ஜாமீன் விவகாரம்: வெள்ளிக்கிழமை தீர்ப்பு
டெல்லி:
நக்கீரன் ஆசிரியர் கோபாலை ஜாமீனில் விடுதலை செய்ததை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீது வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்த்துள்ளது.
பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட கோபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால்,அவரை விடுவிக்க மறுத்துவிட்ட தமிழக அரசு, இந்த ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்தது.
இதன் மீது இன்று விசாரணை நடந்தது. இதில் தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம்அறிவித்தது.
chennai astrology ranking kamal simran kural art gallery florals harini siddarth rating kannappan pondicherry alexa
Story first published: Wednesday, September 24, 2003, 5:30 [IST]