அம்மா, அம்மா!!
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:
ஜெயலலிதா தனது பேச்சை முடித்து இருக்கையில் அமர்ந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒரு பெண் எழுந்து அம்மா,அம்மா என்று கூக்குரலிட்டார். இதைப் பார்த்ததும் பாதுகாவலர்கள் அந்தப் பெண்ணை நெருங்கி அவரைவெளியேற்ற முயன்றனர்.
ஆனால், அந்தப் பெண்ணைக் கவனித்து விட்ட ஜெயலலிதா, பாதுகாவலர்களிடம்,அந்தப் பெண்ணை மேடைக்குஅழைத்து வருமாறு கூறினார்.
இதையடுத்து அப் பெண் மேடைக்கு வந்தார். ஜெயலலிதாவை வணங்கிய அவர் தனது கையில் வைத்திருந்தகோரிக்கை மனுவைக் கொடுத்து தனது குறைகளை கண்ணீர் மல்க கூறினார்.
அவரது கோரிக்கைளை நிதானமாக கேட்டுக் கொண்ட ஜெயலலிதா, நிச்சயம் உதவி செய்வதாக உறுதியளித்துஅந்தப் பெண்ணை அனுப்பி வைத்தார்.
அந்தப் பெண் வேலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பது பின்னர் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications