For Daily Alerts
Just In
இலங்கை அகதிகளுக்கு இட ஒதுக்கீடு: சுவாமி வழக்கு- அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
இலங்கைத் தமிழ் அகதிகளின் குழந்தைகளுக்கு, தமிழக கல்விக் கூடங்களில் வழங்கி வந்த இட ஒதுக்கீட்டை ரத்துசெய்ததை எதிர்த்து ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனு குறித்து விளக்கம்அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் தானே நீதிமன்றத்தில் ஆஜராகிய சுப்ரமணியம் சுவாமி, இலங்கைத் தமிழ் அகதிகளின்குழந்தைகளுக்கு தமிழக கல்வி நிலையங்களில் தொடர்ந்து இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அவர்களைபடிக்க வைக்க வேண்டியது அரசின் கடமையாகும் என்றார்.
இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி, நீதிபதி குலசேகரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.
இந்த சிறப்பு ஒதுக்கீட்டை அரசு சத்தமில்லாமல் ரத்து செய்துள்ளது.
Comments
Story first published: Wednesday, September 24, 2003, 5:30 [IST]