காதலனுடன் ஓடினார் மகள்: சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
பழனி:
காதலனுடன் மகள் ஓடிப் போனதால் மனமுடைந்த சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் நடராஜன். இவரதுமக் மைதிலி.
இவரது வீட்டுக்கு எதிரே பழனி காவல் நிலையத்தில் ரைட்டராகப் பணியாற்றும் முத்துகாமு குடியிருந்து வருகிறார்.இந் மைதிலிக்கும் முத்துகாமுவின் மகன் சுரேசுககும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
வழக்கம் போல காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தால் காதலர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவுவீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.
இதையடுத்து தனது மகள் கடத்தப்பட்டதாக பழனி டவுன் காவல் நிலையத்தில் நடராஜன் புகார் தந்தார்.இதையடுத்து தான் பணிபுரியும் கீரனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.அங்கிருந்தவர்களிடம் தான் பூச்சி மருந்து குடித்து விட்டதாகக் கூறினார்.
இதையடுத்து அவர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால்,சிகிச்சை பலனின்றி நடராஜன்இறந்துவிட்டார்.












Click it and Unblock the Notifications