பஸ் மோதி 2 மாணவர்கள் பலி: தம்பித்துரையின் 4 கல்லூரி பேருந்துகளுக்கு தீ வைப்பு

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

முன்னாள் அமைச்சர் தம்பித்துரைக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியின் 4 பேருந்துகளுக்கு, அக்கல்லூரிமாணவர்களே தீ வைத்தனர்.

தர்மபுரி மாவட்டம் ஒசூரில் தம்பித்துரைக்குச் சொந்தமான அதியமான் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களான செல்வகுமார், நாராயண சாமி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இன்றுகல்லூரிக்கு வந்தனர்.

கல்லூரிக்குள் அவர்கள் நுழைந்தபோது, மிக பயங்கர வேகத்தில் வந்த கல்லூரிப் பேருந்து அவர்கள் மீதுமோதியது. இதில் 2 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்த 4 கல்லூரிபேருந்துகளுக்கும் தீ வைத்தனர்.

தகவல் அறிந்ததும் அங்கு போலீஸ் படை விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டது. கல்லூரிக்குள் பெரும்பதற்றம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கல்லூரி தனக்கு சொந்தமானதல்ல என்றும் தனது மனைவிக்கு சொந்தமானது என்றும் தம்பிதுரை சொல்வதுவழக்கம். மேலும் இக் கல்லூரியின் மீது சில வழக்குகளும் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+