For Daily Alerts
Just In
தஞ்சை விமான தளத்திற்குள் ஊடுருவியர் கைது
தஞ்சாவூர் :
தஞ்சாவூர் அருகே உள்ள இந்திய விமானப் படை விமான தளத்திற்குள் ஊடுறுவிய நபர் கைது செய்யப்பட்டார்.இவர் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
தஞ்சாவூர் அருகே உள்ள மாப்பிளைநாயக்கன்பட்டி என்ற இடத்தில் விமானப் படையின் விமான தளம் உள்ளது.இங்கு ஒரு நபர் உள்ளே நுழைந்து ரகசியமாக உலவிக் கொண்டிருந்தார்.
அவரை விமான தளத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் விரட்டிப் பிடித்தனர். அவரிடம்விசாரித்தபோது அவரது பெயர் ஷியாம் லால் என்பதும் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அவர் எதற்காக விமான தளத்திற்குள் ஊடுறுவினார் என்பது தெரியவில்லை. உளவு பார்க்க வந்தாரா என்பதுகுறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Comments
Story first published: Wednesday, September 24, 2003, 5:30 [IST]