பாண்டிச்சேரி பல்கலை.க்கு புதிய துணை வேந்தர் நியமனம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத் துணை வேந்தராக பேராசிரியர் ஏ.கே. பட்நாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் பணியாற்றி வருகிறார்.
1985 ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நான்காவது துணை வேந்தர் இவர்.
துணை வேந்தராக இருந்த டாக்டர் வி.டி. பாட்டீல் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்துபட்நாகர் துணை வேந்தராகப் நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த வி.டி.பாட்டீல். கன்னடர் ஆவார். இவர் துணை வேந்தராகபதவியேற்றது முதல் தமிழ், தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த தமிழ்ப் பெயர்களை அழித்து விட்டு, சமஸ்கிருத, வட நாட்டுப் பெயர்களைசூட்டினார். மேலும், பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை பாடக் கூடாது என்று தடைவிதித்தார். சுத்தமான தமிழ்ப் பெயர்கள் கொண்டவர்களைப் பார்த்தால் கேலி செய்வதும் உண்டு.
இதையடுத்து அவர் ஓய்வு பெற்றவுடன் பல்கலைக்கழக ஊழியர்களும் மாணவர்களும் சேர்ந்து அவரைத் தாக்கியதுநினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications