அதிமுக எம்.பி. கோகுல இந்திரா மீது வழக்குப் பதிவு
மதுரை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரைத் தாக்கியதாக, அதிமுக ராஜ்யசபா எம்.பி. கோகுலஇந்திரா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கோகுல இந்திராவும் அவரது ஆதரவாளர்களும் புதன்கிழமை சென்றனர்.அங்கு ஒரு நோயாளியைப் பார்த்து நலம் விசாத்தனர்.
அப்போது அந்த வார்டில் நின்று கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கண்ணனும் கோகுல இந்திராவின் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து எம்.பியும், அவருடன் வந்தவர்களும், கண்ணனை சரமாயாகத் தாக்கினர்.
இதுகுறித்து கண்ணன் கொடுத்த புகான் பேரில் மதிச்சியம் போலீஸார், கோகுல இந்திரா மற்றும் அவருடன்வந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வழக்கமாக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவரது தோழி சசிகலாவுக்கு அருகே அமரும்அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தவர் கோகுல இந்திரா. ஆனால், சமீப காலமாக அவர் மீது கடுப்பில் இருக்கிறதுபோயஸ் கார்டன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications