ஆட்டோவை அப்பளமாக்கிய அரசு பஸ்: 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்:
திருவாரூர் அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மிக பயங்கரமாக மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த 4 பேரும்பரிதாபமாக இறந்தனர்.
திருவாரூர் மாவட்டம் நீலப்பாடியிலிருந்து, திருவாரூர் நோக்கி ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அதில்டிரைவரும் 3 பயணிகளும் பயணம் செய்தனர்.
அப்போது நாகப்பட்டனம் நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. பிடாரம் கொண்டான் என்ற இடத்தில்எதிரே வந்த ஆட்டோ மீது அரசுப் பேருந்து அதி பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு,உருக்குலைந்து அப்பளமானது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் நாகைமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார்.
படு வேகமாக பேருந்தை ஓட்டி வந்த அரசு பேருந்து டிரைவர் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications