கட்டி உருண்ட காங்கிரஸார்: கடலூர் கோஷ்டி மோதல்
கடலூர் :
காங்கிரஸ் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்டி உருண்டுசண்டை போட்டனர்
கடலூர் மாவட்ட காங்கிரஸ் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் இளங்கோவன் மற்றும் வாசன்ஆதரவாளர்களுக்கிடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்டிஉருண்டு சண்டை போட்டனர். சிலரின் சட்டைகள் கிழிந்தன, இருக்கைகள் பறந்தன.
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடந்து வருகிறது. ஆனால்இளங்கோவன், சோ.பாலகிருஷ்ணன் கையெழுத்துப் போட்ட உறுப்பினர் அட்டையை வாங்க மாட்டோம் என்றுவாசன் தரப்பு மாவட்ட தலைவர்கள் கூறி விட்டனர்.
இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக, தமிழக காங்கிரஸ் அனைத்து மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கும்பார்வையாளர்களை நியமித்தது. இவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று உறுப்பினர் அட்டைகளைவிநியோகித்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்டத்திற்கு கண்ணன் என்பவர் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை உறுப்பினர்அட்டைகளை விநியோகிப்பதற்காக கட்சி அலுவலகத்திற்கு கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயராமன்உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த வாசன் ஆதரவாளரான மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் அவரதுஆதரவாளர்கள், கண்ணன், ஜெயராமன் ஆகியோடம் தகராறு செய்தனர். உறுப்பினர் அட்டைகளை விநியோகிக்கக்கூடாது என்று வாக்குவாதம் செய்தனர்.
இந்த வாக்குவாதம் வழக்கம் போல மோதலாக மாறியது. இரு தரப்பினரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.இதில் ஜெயராமனின் சட்டை கிழிந்தது. கட்சியின் பிற நிர்வாகிகள் தலையிட்டு மோதியவர்களை கட்டுக்குள்கொண்டு வந்தனர்.
மோதல் நடந்த காங்கிரஸ் அலுவலகம் போர்க்களம் போல காணப்பட்டது. வயதில் மூத்தவனாக இருந்தும்,காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக இருந்து வரும் தன்னை அடியாட்கள் வைத்து தாக்கி விட்டதாக ஜெயராமன்மிகவும் வேதனையுடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications