For Daily Alerts
Just In
ஊனமுற்ற சிறுமியைக் கற்பழித்தவருக்கு 7 ஆண்டு சிறை
ஊட்டி:
ஊனமுற்ற சிறுமியைக் கற்பழித்த வாலிபருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தீனஹட்டி கிராமத்தைச் சேர்ந்த திலகவதி ஊனமுற்றவர். 15 வயதானஇச்சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்ற வாலிபர் கடந்த 2001ம் ஆண்டு கற்பழித்து விட்டார்.
இதுகுறித்து திலகவதியின் தாயார் பத்மாவதி கொடுத்த புகாரின் பேரில் தேவராஜ் கைது செய்யப்பட்டு அவர் மீதுமாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் தேவராஜுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதித்து நீதிபதி சண்முகம் தீர்ப்பளித்தார்.
Comments
Story first published: Thursday, September 25, 2003, 5:30 [IST]