விரைவில் சென்னை- பாண்டிச்சேரி இடையே ஜன சதாப்தி ரயில்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்:

தஞ்சாவூருக்கும் கோயம்புத்தூருக்கும் இடையே இயக்கப்பட்டு வரும் ஜன சதாப்தி ரயிலை ரத்து செய்ய தென்னகரயில்வே முடிவு செய்துள்ளது.

அதற்குப் பதிலாக சென்னை- பாண்டிச்சேரி இடையே இந்த ஜன சதாப்தி இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆனந்த் திருவாரூரில் நிருபர்களிடம் கூறுகையில்,

தஞ்சை- கோவை இடையிலான ஜன சதாப்தி ரயிலில் போதிய கூட்டம் இல்லை. இதனால் அந்த ரயிலால் நஷ்டமேஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த ரயிலை ரத்து செய்யவும் அதற்குப் பதிலாக இந்த இரு நகர்களுக்குஇடையே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலை விடவும் முடிவு செய்துள்ளோம்.( எக்ஸிபிரஸ் ரயிலை விட சதாப்தியில்கட்டணம் அதிகமாகும்).

திருவாரூர்- நாகூர், நாகூர்- காரைக்கால் இடையே 10 பெரிய பாலங்களை அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில் வரும்போது சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படுவதை தவிர்க்க முடியும்.

வேதாரண்யம்- அகஸ்தியம்பள்ளி இடையே இயக்கப்பட்ட சிறிய ரயிலை மாற்றிவிட்டு, வழக்கமான ரயிலை விடஆரம்பித்துவிட்டோம். வேதாரண்யத்தில் உற்பத்தியாகும் உப்பை திருச்சி கொண்டு செல்ல வசதியாக ஒரு சரக்குரயில் விடப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+