For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் இஸ்கான் கோவிலில் போலீசார் அதிரடி சோதனை

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

பெங்களூர் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா இயக்கத்துக்குச் சொந்தமான மிகப் பெரிய கோவிலில் கொல்கத்தா நகரபோலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

கொல்கத்தா இஸ்கான் கோவிலில் பல கோடி மோசடி செய்த வழக்கில் அந்தக் கோவிலின் முன்னாள் தலைவர்உட்பட 4 பேரை தேடி இந்த போலீசார் பெங்களூர் வந்து இந்தச் சோதனைகளை நடத்தினர்.

உலகப் பிரசித்தி பெற்ற இஸ்கான் அமைப்புக்கு பல நாடுகளில் கோவில்கள் உள்ளன. கோடிக்கணக்கில்சொத்துக்கள் உள்ளன. கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் கோவிலில் தலைவராக இருந்த மகாஜன் தாஸ் மற்றும்அறங்காவலர்கள் உத்தம தாஸ், ஆத்ருதரன் தாஸ் உள்ளிட்ட 4 பேரும் கோடிக்கணக்கான கோவில் பணத்தைகையாடல் செய்துவிட்டதாக புகார் உள்ளது.

இந் நிலையில் இந்த நால்வரும் தலைமறைவாகிவிட்டனர். இவர்களை கொல்கத்தா போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர். இந் நிலையில் இந்த நான்கு பேரும் பெங்களூரில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல்கிடைத்தது.

இதையடுத்து எஸ்.பி. தலைமையிலான கொல்கத்தா போலீசார் 2 நாட்களுக்கு முன் பெங்களூர் வந்தனர்.தலைமறைவான நான்கு பேரும் இஸ்கான் கோவிலில் தான் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததால், போலீஸார்நேற்று காலை 10 மணிக்கு பெங்களூர் வெஸ்ட் ஆப் கார்ட் ரோட்டில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு வந்தனர்.

ஆனால், கோவில் நிர்வாகிகள் போலீசாரை உள்ளே விட மறுத்தனர். இதையடுத்து பெங்களூர் நகர போலீஸார்உதவியுடன் கொல்கத்தா போலீஸார் இஸ்கான் கோவிலுக்குள் சென்று அதிரடிசோதனை நடத்தினர்.

சுமார் அரை மணி நேரம் சோதனை நடந்தது. சிறிய மலை மீது அமைந்துள்ள இந்தக் கோவிலின் அனைத்துப்பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால், குற்றவாளிகள் யாரும் சிக்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X