விவாகரத்து கேட்கும் சர்மிளா: டாக்டர் பிரகாசால் வந்த பிரச்சனை
சென்னை:
டி.வி. நடிகை சர்மிளா விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்டடில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது மனுவில் கணவர் கொடுமை செய்வதால் விவாகரத்து கோருவதாக குறிப்பிட்டுள்ளார்.
செக்ஸ் சந்தேகங்களை போக்கும் புதிரா புனிதா நிகழ்ச்சி மூலம் டாக்டர் மாத்ருபூதத்துடன் சேர்ந்து பிரபலமானவர்சர்மிளா.
இதைடுத்து டி.வி. தொடர்களிலும் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். அப்போது டிவி நடிகர் மோகனுடன் காதல்மலர்ந்தது. இருவரும் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர்.
இந் நிலையில் புளு பிலிம் டாக்டர் பிரகாஷ் எடுத்துள்ள படங்களில் சர்மிளாவும் நடித்துள்ளதாக செய்திகள்கசிந்தன. இதையடுத்து கணவன்-மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டது. இருவரும் பிரிந்து வாழஆரம்பித்தனர்.
மேலும் டாக்டர் சர்மிளா கணவர் மோகன் மீது சென்னை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும்புகார் கொடுத்தார். கணவர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும்கோரியிருந்தார்.
இந் நிலையில் விவாகரத்து கோரி சர்மிளா சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.கணவர் கொடுமை செய்வதால் விவாகரத்து வேண்டுவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
-->