கண்ணப்பனை பொடாவில் கைது செய்வது தவறு: பா.ஜ.க. சொல்கிறது
சென்னை:
மத்திய அமைச்சர் கண்ணப்பனை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ய முயல்வது தேவையற்றது. வைகோவிஷயத்தில் பொடாவை தவறாகப் பயன்படுத்திய தமிழக அரசு மீண்டும் அந்தத் தவறைச் செய்யக் கூடாது என்றுபா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
பொடாவை தமிழக அரசு மீண்டும் தவறாகப் பயன்படுத்த முயல்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ் கண்ணப்பனைக் கைதுசெய்ய முயல்வதை பா.ஜ.க. எதிர்க்கிறது.
அதே நேரத்தில் மத்திய அரசுக்கு தொல்லை நேரும் வகையில் பேசுவதையும், செயல்படுவதையும் அமைச்சர்கள்தவிர்க்க வேண்டும்.
பொடா மறுபரிசீலனைக் கமிட்டி தரப் போகும் பரிந்துரைகளை அனைத்து மாநில அரசுகளும் ஏற்கும் வகையில்இந்தச் சட்டத்திலேயே திருச்சம் கொண்டு வரலாம். இப்போதைக்கு இந்தக் கமிட்டியின் அதிகாரம் பரிந்துரைஅளவில் தான் உள்ளது.
இதனால், இந்தக் கமிட்டியின் உத்தரவை மாநில அரசுகள் ஏற்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்ற நிலைஉள்ளது. இதை மாற்ற வேண்டும். அதற்குத் தகுந்த வகையில் இந்தக் கமிட்டியின் பரிந்துரைகளை உள்ளடக்கிபொடா சட்டத்தையே திருத்தலாம்.
முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதற்காக அரசியல் சட்டத்தைத்திருத்த வேண்டும் என்றார் நாயுடு.