மனைவியின் சாவு: மின்சாரம் பாய்ச்சி கணவர் தற்கொலை
சென்னை:
மனைவி இறந்த துக்கம் தாளாமல் உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார் கணவர்.
சென்னை ஆவடியில் உள்ள ராணுவ டேங்குகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தவர்நாராயணன். கடந்த மாதம் பிரசவத்தின்போது இவரது மனைவி இறந்து விட்டார். குழந்தை மட்டும் உயிர்தப்பியது.
மனைவி இறந்ததால் நராயணன் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்தார். இதனால் அவர் தற்கொலைக்கு முயன்றார்.ஆனால், உறவினர்கள் அவரைக் காப்பாற்றி விட்டனர்.
இந் நிலையில் நேற்று மின்சார வயரை கையில் கைட்டிக் கொண்டு மறு முனையை சுவிட்சுடன் இணைத்தார்.பின்னர் கட்டிலில் படுத்துக் கொண்டு சுவிட்சை இயக்கியுள்ளார். மறு விநாடியே மின்சாரம் பாய்ந்து அவர்இறந்தார்.
நீண்ட நேரமாக அறைக்குள் சென்ற நாராயணனைக் காணாத உறவினர்கள் கதவை உடைத்துத் திறந்தனர்.அப்போது மின்சாரம் பாய்ந்து நாராயணன் தற்கொலை செய்து இறந்து கிடந்தது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications