அவதூறு வழக்கால் மன உளைச்சல்: தமிழக அரசிடம் ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு கேட்கிறார் இளங்கோவன்
சென்னை:
பழிவாங்கும் நோக்கத்துடன் தமிழக அரசு என் மீது வேண்டுமென்றே அவதூறு வழக்குப் போட்டதால் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறேன். இதனால் எனக்கு இந்த அரசு ரூ. 10 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்றுகோரி காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதை ஏற்றுக் கொண்ட சென்னை செசன்ஸ் நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தல் விவகாரத்தை தமிழக அரசு சரிவர கையாளவில்லை என்றுஇளங்கோவன் பேசியதையடுத்து அவர் மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்குநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இளங்கோவன் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,
எதிர்க் கட்சியைச் சேர்ந்த என் மீது தமிழக அரசு பழிவாங்கும் நோக்கில் வழக்குப் போட்டுள்ளது. இதில் அதிகாரதுஷ்பிரயோகம் இருப்பது தெளிவாகவே தெரிகிறது. இதன்மூலம் எதிர்க் கட்சியினரின் அடிப்படைஉரிமைகளைப் பறிக்க அரசு முயல்கிறது.
இந்த வழக்கினால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். இதனால் அரசு தான் எனக்கு ரூ. 10லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் நீதிபதிராமலிங்கம்.