தீபாவளிக்கு " டமார்.. டமார்" பட்டாசுகள் கிடையாது!
சென்னை:
தீபாவளிக்கு அதிக சப்தம் கொடுக்கும் வெடிப் பட்டாசுகள் தயாரிக்கப்படுவது 60 சதவீதம் வரைகுறைக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்குப் பதிலாக வண்ண ஒளிகளை மட்டுமே தரும் பட்டாசுகள் அதிக அளவில்தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு பட்டாசு தயாப்பாளர் சங்கம் கூறியுள்ளது.
இந்தச் சங்கத்தின் தலைவர் மகேஸ்வரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த தீபாவளிக்கு அதிக சப்தம் கொடுக்கும் பட்டாசுகளைத் தயாரிப்பதை குறைத்து விட்டோம். 130 டெசிபல்அளவுக்கு மேல் சப்தம் எழாத வகையிலான பட்டாசுகளே தயாரிக்கப்பட்டுள்ளது.
40 சதவீத பட்டாசுகள் மட்டுமே சப்தம் தரக் கூடியதாக இருக்கும். மீதள்ள 60 சதவீத பட்டாசுகள் வண்ண வண்ணபட்டாசுகள், மத்தாப்புகளாகவே இருக்கும்.
சீனப் பட்டாசுகள் உலக அளவில் மிகப் பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காரணம் அங்குள்ள அரசுபட்டாசு தயாரிப்பாளர்களுக்கு வழங்கும் நல்ல ஒத்துழைப்பும், சலுகைகளுமே.
அதேபோல இந்தியாவிலும் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு அரசு சலுகைகளையும் ஒத்துழைப்பையும் தரவேண்டும்.
உரிமம் பெற்று முறையாக நடக்கு பட்டாசுத் தயாரிப்பு நிறநவனங்களில்சிறுவர்கள் பணியில்ஈடுபடுத்தப்படுவதில்லை. மேலும் தொழிலாளர் சட்ட விதிமுறைகளை நாங்கள் முறையாகவே கடைப்பிடிக்கிறோம்.இரவுப் பணியில் ஊழியர்கள் யாரும் ஈடுபடுத்தப்படுவதில்லை என்றார்.












Click it and Unblock the Notifications