திருச்சி ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர்கள் 7 பேர் கைது
திருச்சி:
திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ. 17 லட்சம் மோசடி செய்த வழக்கில் 7 ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
திருச்சி, மண்ணார்புரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பெருமளவில்லஞ்சம் வாங்குவதாகவும், பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதாகவும் குற்றப் பிரிவு போலீஸாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து ஊழல் தடுப்புப் போலீஸார் உதவியுடன் 2 மாதங்களுக்கு முன்பு திருச்சி வட்டார போக்குவரத்துஅலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது வாகனங்களை பதிவு செய்வது, உரிமம் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் ரூ. 17 லட்சம் வரை மோசடிநடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் கணிப்பொறிகள் மூலம் தரப்படும் ரசீதுகளை திருத்தியும் அழித்தும்பல லட்சம் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றி வரும் 14 ஊழியர்கள் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.
போக்குவரத்துத் துறை செயலாளரும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் 7 இளநிலை உதவியாளர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.