விண்வெளி வீரருடன் ராக்கெட்டை ஏவுகிறது சீனா

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்:

தனது நாட்டின் முதல் விண்வெளி வீரரை நாளை சீனா விண்ணில் செலுத்தவுள்ளது. ஒரு விண்வெளி வீரருடன்தனது ராக்கெட்டை சீனா நாளை ஏவுகிறது.

சென்சாவ் 5 (புனிதக் கலம்) என்ற இந்த ராக்கெட் தற்போது எரிபொருள் நிரப்பப்பட்டு கோபி பாலைவனத்தில்உள்ள சீனாவின் ராணுவ தளவாடத்தின் விண் நிலைய லாஞ்ச் பேடியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதை விண்ணுக்குஅனுப்புவதற்கான கவுண்ட்-டெளன் தொடங்கிவிட்டது.

15ம் தேதி முதல் 17ம் தேதிக்குள் இந்த ராக்கெட் செலுத்தப்படலாம் என்று கூறப்பட்டாலும், நாளையே இதைஏவிவிட சீனா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், ஜனாதிபதியுமா ஹூ ஜின்டோ மற்றும் மத்திய ராணுவத்துறையின் தலைவர் ஜியாங் ஜெமின் ஆகியோர் விண்கலம் ஏவப்படும் நிகழ்ச்சியை ஜூகுவன் செயற்கைக்கோள்ஆய்வு மையத்திலிருந்து பார்வையிட உள்ளனர்.

சீனாவின் இந்த நோக்கம் நிறைவேறி விட்டால் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதில் அமெரிக்கா மற்றும்ரஷ்ய நாடுகளுக்கு அடுத்து சீனா, 3 வது இடத்தைப் பிடிக்கும்.

விண்கலத்தில் அனுப்ப்படுவதற்கு மூன்று பேரை சீனா தயார் செய்துள்ளது. இதில் ஒருவர் கடைசி கடத்தில் தேர்வுசெய்யப்படுவார். இந்த விண்கலம் பூமியை 23 மணி நேரத்தில் 14 முறைகள் சுற்றி வரும். பின்னர் விண்வெளி வீரர்பாராசூட்டுடன் கூடிய கலம் மூலமாக தரையிறங்குவார்.

நாஸாவுக்கு தேர்வான இந்திய மாணவர்:

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக பயிற்சி பெற டெல்லியைச் சேர்ந்த சாத்விக்அகர்வாலை (வயது 14 வயது) மாணவ விண்வெளி வீரராக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானநாஸாா தேர்வு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+