For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர் பகுதி சீரமைப்புக்கு இந்தியா மேலும் ரூ. 300 கோடி உதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் தமிழர் பகுதிகளை சீரமைக்க மேலும் ரூ. 300 கோடி நிதியுதவிவழங்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா-இலங்கை கூட்டுக் கமிஷன் கூட்டத்தில் பங்கேற்கஇன்று சின்ஹா இலங்கை புறப்பட்டார். வழியில் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்பேசுகையில்,

இலங்கையில் அதிபர் சந்திரிகா, பிரதமர் ரணில் விக்கிரசிங்கே ஆகியோரையும் சந்திக்கவுள்ளேன். கூட்டுக்கமிஷன் கூட்டத்தின்போது, தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவது குறித்துவிவாதிக்கப்படும்.

இலங்கை இனப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளை சீரமைக்க, இலங்கை அரசுக்கு இதுவரை ரூ. 450கோடி நிதியை இந்தியா வழங்கியுள்ளது. மேலும் ரூ. 300 கோடி உதவி வழங்கப்படும்.

மாட்ரிட் நகரில் நடக்கும் இலங்கை மறுசீரமைப்புக்கான நிதி திரட்டும் மாநாட்டில் பங்கேற்பது குறித்து இந்தியாஇன்னும் முடிவேதும் எடுக்கவில்லை என்றார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசிடம் கோருவீர்களாஎன்று ஒரு நிருபர் கேட்டபோது, இது தொடர்பாக பேசியுள்ளோம். வாய்ப்பு கிடைத்தால் இந்தமுறையும் பேசுவேன்என்றார்.

மேலும், இனப் பிரச்சனையில் மூன்றாவது நாடு ஏதும் செய்ய முடியாது. ஒப்பந்தம் ஏற்பட்டால் அது புலிகளுக்கும்இலங்கை அரசுக்கும் இடையில் தான் ஏற்பட வேண்டும் என்றார் யஷ்வந்த் சின்ஹா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X