மின் கட்டணம்: சிறு விவசாயிகளுக்கு காலக் கெடு நீட்டிப்பு
சென்னை:
சிறு விவசாயிகள் தங்களது மின்சாரக் கட்டணத்தை செலுத்த அக்டோபர் 31ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரம் தற்போது ரத்து செய்யப்பட்டு விட்டது. அதற்குப் பதிலாகசிறு மற்றும் குறு விவசாயிகள், குடிசை வாசிகளுக்கு மானிய விலையில் மின்சாரத்தை அரசு வழங்கி வருகிறது.
விவசாயிகள் கட்ட வேண்டிய மின் கட்டணத்தை செலுத்த நேற்றுடன் (15ம் தேதி ) காலக்கெடு முடிவடைந்தது.இந்த நிலையில் தற்போது காலக்கெடு 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணத் தொகையை செலுத்தும் நிலையங்களில் கட்டுக்கடங்காத அளவுக்கு விவசாயிகள் கூட்டம்இருப்பதால், மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில்கூறப்பட்டுள்ளது.
15 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளில் இதுவரை 7 லட்சம் விவசாயிகள் தங்களது கட்டணத்தைசெலுத்தியுள்ளனர் என்று மின்வாரியம் கூறியுள்ளது. அதேபோல, 4 லட்சம் குடிசைவாசிகளில் இதுவரை 2 லட்சம்பேர் தங்களது கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications