பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் சாவு
கோவை:
கோவையில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது, 2 துப்புறவுத்தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பலியாயினர்.
கோவை பீளமேடு பகுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் உள்ளது. இங்குள்ள கழிவுநீர்த் தொட்டியைசுத்திகரிக்கும் பணியில் சில தொழிலாளர்கள் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விஷ வாயு தாக்கி ஆறுமுகம், கன்னியப்பன் ஆகிய இரு துப்புறவுத் தொழிலாளர்களும் பரிதாபமாகஇறந்தனர்.
அவர்கள் இறந்த விவரத்தை போலீஸாருக்குத் தெரிவிக்காமல் நிர்வாகத்தினர் தாமதப்படுத்தியதால், இருஉடல்களும் பிரேதப் பரிசோதனை செய்ய முடியாமல், நிறுவனத்திலேயே பல மணி நேரம் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இருவரின் உறவினர்களும் ஆவேசமடைந்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்குமாறுவலியுறுத்தவே பின்னர் போலீஸில் தெரிவிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்து, உடல்கள் பிரேதப் பரிசோதனைசெய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications