பயங்கர ஆயுதங்களுடன் பசுபதி பாண்டியன் கைது

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

தேவேந்திர குல வேளாள சங்கத் தலைவரும் சமீபத்தில் போலீஸ் எண்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவெங்கடேச பண்ணையாரின் பரம விரோதியுமான பசுபதி பாண்டியன்

பயங்கர ஆயுதங்களுடன் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் 9 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

தேவேந்திர குல வேளாளர் சங்கத் தலைவர் பசுபதி பாண்டியனின் தம்பி தாமோதரன். இவர் தூத்துக்குடியில் பலகொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். இவரைத் தேடி வந்த போலீஸார் திண்டுக்கல்லில் உள்ளபசுபதி பாண்டியனின் வீட்டில் தாமோதரன் பதுங்கி இருப்பதை அறிந்தனர்.

இதையடுத்து பசுபதி பாண்டியனின் வீட்டை நேற்று இரவு போலீஸார் முற்றுகையிட்டனர். ஆனால் தாமோதரன்வீட்டில் இல்லை. மாறாக பசுபதி பாண்டியனுடன், 9 பேரும் வீட்டில் இருந்தனர்.

அவர்களது வீட்டை போலீஸார் சோதனையிட்டபோது பட்டாக் கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள், கைஎறிகுண்டுகள் ஆகியவை இருந்தன. இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரையும் கைது செய்யப்பட்டனர்.

பசுபதி பாண்டியன் மீதும் பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தூத்துக்குடியில் இருந்தால் தனதுஉயிருக்கு ஆபத்து நேரலாம் என்பதால் திண்டுக்கல்லில் அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

பண்ணையாரின் சாவினால் கடுப்பில் உள்ள நாடார் இனத்தினரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகவேபசுபதி பாண்டியனை போலீசார் கைது செய்து எண்கெளன்டர் விவகாரத்தை திசை திருப்ப முயல்வதாக அந்தச்சமுதாய மக்கள் கூறுகின்றனர்.

கைதான பசுபதி பாண்டியன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் சிறையில் வைக்கநீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவரும், கூட்டாளிகளும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+