திமுக-பா.ஜ.க லடாய் முடிவுக்கு வர வாஜ்பாய் விருப்பம்: திருநாவுக்கரசர்
சென்னை:
திமுகவுக்கும், தமிழக பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இடையிலான கருத்து வேறுபாடு இந்த ஆண்டு டிசம்பர்மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணைஅமைச்சர் திருநாவுக்கரசர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரதமர் வாஜ்பாய்சமாதான முயற்சிகளை தொடங்கி வைத்து விட்டார்.
இரு கட்சிகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை களைவது தொடர்பாக விமான நிலையத்தில்வைத்து எங்கள் கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் வாஜ்பாய் ஆலோசனை நடத்தினார்.
விரைவில் டெல்லிக்கு தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் குழு சென்று பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி,கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரை சந்தித்து விரிவாகப் பேச்சு நடத்தும்.
இருப்பினும், திமுக தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும். மத்தியில் மட்டும் பா.ஜ.க.வுடன் உறவு என்பதைஏற்க முடியாது. காரணம், பா.ஜ.க. என்றால் அது ஒன்றுதான், மத்தியில் வேறு, மாநிலத்தில் வேறு என்று எங்கள்கட்சியைப் பிரித்துப் பார்க்க முடியாது என்றார்.