கைதான 41 தமிழக மீனவர்களை விடுவித்தது இலங்கை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படை வீரர்களால் பிடித்துச் செல்லப்பட்ட 41 தமிழக மீனவர்கள் மண்டபம் வந்து சேர்ந்தனர்.
நாகப்பட்டனம், ஜெகதாப்பட்டனம், கோட்டைப்பட்டனம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 41மீனவர்களும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது.
இவர்களை விடுதலை செய்ய யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அனைவரும்விடுவிக்கப்பட்டனர்.
இவர்களை இலங்கை கடற்படை, நடுக்கடலில் இந்திய கடலோரக் காவல் படையிடம் ஒப்படைத்தது. அதன்பின்னர் இவர்கள் அனைவரும் மண்டபம் வந்து சேர்ந்தனர்.












Click it and Unblock the Notifications