ஐக்கிய அரபு நாட்டில் கலாம்: ஜனாதிபதியான பின் முதல் வெளிநாட்டு பயணம்
டெல்லி:
ஆசிரியர் தினத்தன்று வானொலியில் உரையாற்றிய அப்துல்கலாம் மாதம் ஒரு முறை வானொலி மூலம் மக்களைச்சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக தனது வெளிநாட்டுப் பயணத்தை கலாம்மேற்கொண்டுள்ளார். முதன் முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு (யு.ஏ.இ) கலாம் புறப்பட்டுச் சென்றார்.தான் செல்லும் சிறப்பு விமானத்துக்கு தஞ்சாவூர் என்று பெயர் சூட்டச் செய்துள்ளார் கலாம்.
இந்த தஞ்சாவூர் விமானம் ஜனாதிபதி, பிரதமரின் வெளிநாட்டுப்பயணத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
போயிங் 747 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் 435 பேர் பயணம் செய்ய முடியும். இதில், குடியரசுத் தலைவர்பிரதமருக்கு தனி படுக்கை வசதிகள், உடன்வரும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு முதல் வகுப்புப் பகுதியும்மற்ற அதிகாரிகளுக்குத் தனிப்பகுதியும், அத்துடன் மாடியும் கொண்ட இந்த விமானம் ஒரு குட்டி அரண்மனைபோல காட்சி தருகிறது.
விமானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கலாம், மாதந்தோறும் ஒருமுறை வானொலி மூலம் மக்களுடன் பேசமுடிவு செய்துள்ளேன் என்றார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபி விமான நிலையத்தில் பட்டத்து இளவரசர் ஷேக் கலிபாபின் சையத்அல் நஹியாவும் அனைத்து அமைச்சர்களும் டாக்டர் அப்துல் கலாமை வரவேற்று அழைத்துச் சென்றனர்.