For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக மீனவர்வர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு: மீனவர் தலையில் குண்டு பாய்ந்தது

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம், தனுஷ்கோடி அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கைகடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவருக்கு தலையில் குண்டுபாய்ந்தது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 600 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். தனுஷ்கோடி அருகேஅவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.

தமிழக மீனவர்களின் படகுகளை மோதி உடைத்த அவர்கள், சரமாரியாக துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் பிரபுஎன்ற மீனவருக்கு தலை மற்றும் காதில் குண்டு பாய்ந்தது.

படுகாயமடைந்து மிக மோசமான நிலையில் உயிருக்குப் போராடிக்குக் கொண்டிந்த அவரை சக மீனவர்கள்,ராமநாதபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து அவர் மதுரை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை கடற்படை வீரர்களின் இந்த அட்டூழியச் செயலால் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் மிகப் பெரும்கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X