ஜெயலலிதாவைத் திட்டனால் காளிமுத்து சிரிப்பாரா?: சோ.பா. கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர அய்யர் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னையில் நாளைகாங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெறவுள்ளது.

காரைக்கால் அருகே அதிமுகவினரால் மணிசங்கர அய்யர் தாக்கப்பட்டார். மயிலாடுதுறையில் உள்ள அவரது கட்சிஅலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.

இதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டனக் கூட்டம் நடத்தவுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னையில் நாளை நடைபெறும்கண்டனக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். அதன் பின்னர்மாநிலம் முழுவதிலும் இத்தகைய கூட்டங்கள் நடத்தப்படும்.

மேலும், மணிசங்கர அய்யருக்கு எதிராக அதிமுகவினர் எப்படி செயல்படுகிறார்களோ, அதே போல நாங்களும்செயல்படுவோம். அவரை யாராவது தாக்கினால், நாங்களும் திருப்பித் தாக்குவோம்.

மணிசங்கர அய்யர் தன்னிடம் அசிங்கமாக பேசினார், இதற்கு அருகில் இருந்த சபாநாயகர் காளிமுத்துவே சாட்சிஎன்று முதல்வர் கூறுகிறார். இது நம்பும்படியாக இல்லை. நிகழ்ச்சி வீடியோ தொகுப்பை பார்க்கும்போது, மணிசங்கரஅய்யர் முதல்வடரிம் வந்து பணிவுடன் ஏதோ கூறுகிறார்.

அருகில் உள்ள காளிமுத்து சிரித்துக் கொண்டிருக்கிறார். முதல்வரை யாராவது அசிங்கமாக திட்டினால், அதைப்பார்த்து சிரித்துக் கொண்டா இருப்பார் காளிமுத்து?.

இவ்வாறு சோ.பா கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் கும அனந்தன் பேசுகையில், கட்சியினர் யாருக்கேனும்ஏதாவது குறைகள் இருந்தால் அதை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் மட்டுமே கூற வேண்டும். மாறாக,தன்னிச்சையாக பத்திரிக்கைகளுக்கு அறிக்கை கொடுத்தாலோ அல்லது நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தாலோஅவர்கள் கட்சியை விட்டே நீக்கப்படுவார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+