தீபாவளி: திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அரசு அனுமதி
சென்னை:
தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் 24, 25, மற்றும் 26 ம் தேதிகளில் 5காட்சிகள் காட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
வரும் 24 ம் தேதி தீபாவளி கொண்டாடப் படுவதையொட்டி விக்ரம், சூர்யா, லைலா, நடித்த பிதாமகன், விஜய்,ஜோதிகா நடித்த திருமலை , அஜித், மீரா ஜாஸ்மின் நடித்த ஆஞ்சநேயா , அர்ஜூன், சிம்ரன் நடித்த ஒற்றன்,ஷாம், அருண்குமார் நடித்த இயற்கை ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
தீபாவளியையொட்டி சிறப்புக் காட்சிகளைத் திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு அதிபர்கள் சங்கத் தலைவர் இராமு.அண்ணாமலை வெளியிட்டுள்ளஅறிக்கையில் :
தமிழ்நாடு திரையரங்கு அதிபர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று திரையரங்குகளில் தீபாவளிப் பண்டிகையைமுன்னிட்டு வரும் 27, 28, 29 மற்றும் 30 ம் தேதிகளில் அதிகப்படியாக நான்காவது காட்சியும், 24, 25, 26 ஆகியதேதிகள் அரசு விடுமுறையானதால் அதிகப்படியாக 5 வது காட்சியும் திரையிட்டுக் கொள்ள அரசு அனுமதிஅளித்துள்ளது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications